இலங்கையில் இன்று மீண்டும் உணரப்பட்ட நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதியளித்துள்ளதுடன் பீதி அடையத் தேவையில்லை என்பதால் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews