மின் கட்டண அதிகரிப்பு!கடும் மனவருத்தத்தில் எரிசக்தி அமைச்சர்

நாளாந்தம் தடையின்றிய மின்சாரம் மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசாங்கம் என்ற வகையிலும் அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் வருந்துவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தீர்மானிக்கப்பட்டதோடு, அதன் எம்.பி.க்கள் எவரும் சபைக்கு பிரசன்னமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews