மட்டு முகத்துவாரம் கமல் பகுதில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில்  மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி ஒருவர் காணாமல் போன சம்பம் இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் காணாமல் போனவரை கடற்படையின் உதவியுடன் தேடிவருவதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

திரைமடு சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த  43 வயதுடைய அன்னரனி என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மீன் பிடிப்பதற்காக வழமைபோல் நேற்று திங்கட்கிழமை இரவு பாலமீன்மடு கடற்கரையில் இருந்து 3 பேர் சிறிய இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக சென்று மீன்பிடித்துவிட்டு சம்பவதினமான இன்று அதிகாலையில் கரைக்கு திரும்பி முகம்முவாரத்தை அண்டியபோது கடல் அலையின் சீற்றத்தினால் கடலில் படகு கவிழ்ந்துள்ளதையடுத்து மூவரும் நீரிழ் மூழ்கிய நிலையில் இருவர் கடலில் நீந்தி தப்பித்து கொண்டதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து காணாமல் போனவரை கண்டுபிடிப்பதற்காக கடற்படை மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews