தேர்தல் பணிக்கு சென்ற ஜீப் வண்டியின் சாரதி விபத்தில் பலி

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி ஜீப் வண்டியின் சாரதி நேற்று காலை உயிரிழந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்நறுவையை சேர்ந்த 29 வயதான சுமித் ஜயதிலக்க என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவரும் வைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews