தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியீடு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டொட் டொனாற்ஸ் டொட் எல்.கே என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு 143 புள்ளிகளும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களுக்கு 142 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கொழும்பு மாவட்டத்தில் சிங்கள மொழி மூலத்தில் 153 புள்ளிகளும் தமிழ் மொழி மூலத்தில் 144 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews