அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நேற்று நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து 72-வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 72 வயதாக ஆசிரியர் எனவும் அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews