யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

தேசிய பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது அவருக்கு எதிராக யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இன்னமும் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ். பல்கலைக்கழக வாயிலில் முன்னெடுத்தனர். இதன்போது மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews