கட்டைக்காட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவால் சாவு…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு சாவடைந்துள்ளார்

நேற்று இரவு 11.30 மணி அளவில் வீட்டில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில்  காணப்பட்டுள்ளார்.உடனடியாக  அயலவர்களால் மருதங்கேணி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இன்று காலை வந்த மருதங்கேணி பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews