கதிர்காமத்தில் இருந்து யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளானது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாத்திரிகர் குழுவொன்றை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews