யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ். துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (25.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 33 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews