இலங்கை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(21) பகல் பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு படகையும், அதிலிருந்த பதினொரு கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews