கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் பேருந்து கையளிப்பு…!

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை மாணவர்கள் ஏற்றப்பட்டு பேருந்தினை சஜித் பிரேமதாச செலுத்தினார்.

 

தொடர்ந்து உத்தியோகபூர்வமாக பேருந்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. பின்னர் மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில், சஜித் பிரேமதாச, வீ.ஆனந்தசங்கரி, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பாடசாலை சமூகதினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews