முழங்காவிலில் இராணுவ சீருடையுடன் களவில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைப்பு……..!

முழங்காவிலில் இராணுவ சீருடையுடன் களவில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைப்பு……..!
முழங்காவில் இரணை மாதா நகர் பகுதியில் களவில் ஈடுபட்டு நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது இரணமாதா நகர் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் களவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததன.
குறித்த களவு நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள் குழு ஒன்று ஈடுபட்டு வருவது தொடர்பில் அப்பகுதி  இளைஞர்கள் அவதானித்தனர்.
இந்நிலையில் களவு நடவடிக்கைக்காக இராணுவ சீருடையை ஒத்த உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை அப்பகுதி  இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
பிடிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் முழங்காவில்  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews