2000 ரூபாய் வழங்கல் தொடர்பில் மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..! |

யாழ்.மாவட்டத்தில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்றைய தினம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும்  யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், கொடுப்பனவு வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவித்திருந்தார். 

யாழ் மாவட்டத்தில் அரசின் இடர்கால கொடுப்பனவு வழங்கல் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நெடுந்தீவு , வேலணை , யாழ்ப்பாணம், மருதங்கேணி, பருத்தித்துறை,

ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கின்றது. குறித்த உதவித்தொகையானது தொடர்ச்சியாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக 36 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இடர் கால உதவித் தொகை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews