அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் சம்பளத்தை நிறுத்தப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு ஏதும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவு சுமார் 7885 பில்லியன் ரூபாவாகும். அதில் 10 சதவீதம் சமூக நலத்துறைக்கும். இது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களைவிட அதிகமாகும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு 1,000 பில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என நினைக்கிறேன்.

நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட 5.8 மில்லியன் குடும்பங்களில், சுமார் 3.4 மில்லியன் குடும்பங்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறும் நிலையில் உள்ளன.

தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட தொகை குறைக்கப்படும். இந்த சதவீதம் குறிப்பிட்ட அளவு குறைக்கப்பட்டாலும், அந்த அம்சத்தையும் கருத்தில் கொண்டு இந்த வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews