வடக்கில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ )சித்தி!

2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564  மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3 ஆயிரத்து 9 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.

இதில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 65 பேரும்,  யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 62 பேரும் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews