பேருந்து – உந்துருளி மோதி கோர விபத்து..! காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு

பொலன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்து ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில்  மாத்தளையைச் சேர்ந்த 35 வயதுடைய அசங்க என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவிக்கையில் “வாழைச்சேனையில் காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் குறித்த நபர் விடுமுறையில் வீடு சென்று கடமைக்காக திரும்பும் வேளையில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தோம்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews