யாழில் உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை

யாழ். நகர் மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள உணவகங்கள், வைத்தியசாலை வீதியில் உள்ள உணவகங்களில் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திடீர் பரிசோதனை இன்று (24.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதார சீர்க்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

அத்தோடு சுகாதார சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் உரிமையாளர்களின் விருப்பத்துடன் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது.

காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews