நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டியடித்தாக மீனவர்கள் குற்றச்சாட்டு

வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு வாரத்திற்கு நேற்று காலை   ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நேற்று மாலை  மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதாக  ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த  மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதையடுத்து இன்று காலை மீனவர்கள் கச்சத்தீவு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது  ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியடித்த துடன், 20க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் படகில் இருந்த மீனவர்களை சரமாரியாக தாக்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், இறால், மீன் பிடி சாதனங்கள் உள்ளிட்டவைகளை அள்ளி சென்றதுடன், மீன் பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.
இதனால் மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் துறைமுகத்தை நோக்கி வந்தனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து  விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு  ஒன்றுக்கு சுமார் 70ஆயிரம் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு  வீசி தாக்குதல் நடத்திய  சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 30க்கும் மேற்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீன்பிடி  விசைப் படகுகள் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளத்தை அழித்ததாக ரோந்து பணியில்  இருந்த இலங்கை கடற்படையினர் படகு எண்ணுடன் வீடியோ எடுத்து  ஜிபிஎஸ் ஆதாரத்துடன் எல்லை தாண்டிய படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews