சந்நிதியான் ஆச்சிரமத்தால் மன்னார் பெரியமுறிப்பு கிராம மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்…!

மடு பிரதேச செயலாளரின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட பெரியமுறிப்பு கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்ட, சிறுவர்களை அதிகமாக கொண்ட நாளாந்த கூலித் தொழிலாளர்களில் தெரிவு செய்யப்பட்ட 95 குடும்பங்களுக்கு ரூபா 450000 பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இவ் உதவித் திட்டத்தை சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாக சென்று வழங்கி வைத்ததுடன் சமூக செயற்பாட்டாளர்களான இ. தயாபரன், அந்தோணிஜேம்ஸ், விவசாய அமைப்பின் தலைவர் ச. சத்தியபாலன், மகளிர் அமைப்பை சேர்ந்த எஸ். மேரிமாக்றேற் மற்றும் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin