கைது செய்யப்பட்ட எஜமானரை பார்க்க பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நாய்!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை தேடி அவருடைய வளர்ப்பு நாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூண்டுக்கு அருகிலேயே படுத்திருந்த சம்பவம் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார் அதனை விரட்டியுள்ளர். இருப்பினும் அந்த நாய் வெளியே செல்லாது பொலிஸ் நிலையத்துக்குள்ளே பதுங்கியிருந்ததுள்ளது.

இதனைக் கண்ட பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறைக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த நபரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என்பது தெரியவந்துள்ளது.

புலத்சிங்கள பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்து ஜீப்பில் அழைத்து வரும்போது குறித்த நாயும் ஜீப்பைப் பின்தொடர்ந்து வந்திருந்தமையும் தெரிய வந்துள்ளது.

பின்னர் அந்த வளர்ப்பு நாய் இரும்புக் கம்பிகள் வழியாக எஜமானைப் பார்த்துக் கொண்டிருந்ததனைப் பொலிஸார் கண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews