நோர்வேயில் வசிப்பவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.நாவாந்துறையை சேர்ந்த இரு பெண்கள் கைது!

நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர் ஒருவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.நாவாந்துறையை சோந்த இரு பெண்கள் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் இருவரையும் கடந்த 18ம் திகதி கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அவர்கள் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews