சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு இளைஞர்கள் பலி, விபத்தில் சிக்கியவர்களை கைவிட்டு கூட்டாளிகள் தப்பி ஓட்டம்.. |

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவ பொதுப்பிட்டிய பணாபிட்டிய வீதியை சேர்ந்த யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும் வாத்துவ தெல்துவ அரியகம பிரதேசத்தை சேர்ந்த சங்தேஷ் சுலோச்சன பியரத்ன ஆகிய

18 வயதுடைய இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பண்டாரகம வீதியில் இளைஞர்கள்

குழுவுடன் உல்லாசமாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​உயிரிழந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி

இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்த இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரந்துடுவ பொலிஸார் வந்து வீதியில் படுகாயமடைந்து இருந்த இரு இளைஞர்களையும் மீட்டு ​​மொரந்துடுவ கோனதுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தபோதும்

அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews