வடக்கு, வடமத்தி, கிழக்கில் மணிக்கு 40 – 50 கி.மீ. வரை காற்று – கிழக்கில் ஒரு சில இடங்களில் 50 மி.மீ. வரை மழை.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, மேற்கு திசையை நோக்கி, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) இலங்கையின் வடக்குக் கரையை அண்மித்து, இந்தியாவின் தமிழ் நாடு நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றையதினம் (19) நாட்டின் கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ. இற்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, ஊவா, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin