அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் இல்ல சிரமதானம் முன்னெடுப்பு

தமிழ் தேசிய முன்னணி கட்சி மாவீரர் தினத்தையிட்டு அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் பணிகளை இன்று வியாழக்கிழமை (18) முன்னேடுத்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலும் இல்லங்களில் விளக்கு ஏற்றி அ ஞ்சலி செலுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4 மாவீரர் துயிலும் இல்லங்களும் துப்பரவு செய்யப்பட்டு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும்; பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடியாறு துயிலும் இல்ல துப்பரவு பணி இன்று இடம்பெற்றது இதன் போது பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த சிரமதான பணியினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews