ரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: சாரதி உயிரிழப்பு!

அஹுங்கல்ல, பலபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை உள்ள ஹீனடிய ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
ஹீனடிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று மூடப்பட்ட ரயில் கடவையை உடைத்துக்கொண்டு கொலன்னாவிலிருந்து காலி நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews