இறைச்சிக்கு வெட்டுவதற்க்காக திருடப்பட்ட மூன்று பசு மாடுகள் பருத்தித்திறை பொலீசாரால் மீட்பு….!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரகுறிச்சி பிரதேசத்தில் அறுவைக்காக திருடப்பட்ட 03 பசு மாடுகளை பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலீசார்  மீட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கைப்பற்றப்பட்ட குறித்த பசுக்களை பருத்தித்துறை நீதிமன்றத்தின் ஊடாக மூன்று பசுக்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்க  பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க  நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும் குறித்த மாட்டை திருடியவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பருத்தித்துறை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews