பளையில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் கைப்பற்றல்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அனுமதிபத்திரமின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் நேற்று விசேட பொலீஸ்  பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
குறித்த சம்பவமானது நேற்று  (10) மாலை பளை செல்வப்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றுவதாக பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் வைத்து டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்லலதுடநந்  சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்..
இன்று  (11) டிப்பர் வாகனமும் கைது செய்யப்பட்ட சாரதியும்  கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews