பளையில் பேரூந்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றைய (05) பேரூந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழிலிருந்து சுற்றுலாவுக்காக திருகோணமலை சென்று நேற்றைய தினம் திரும்பி வந்துகொண்டிருந்த வேளை பேரூந்தில் இருந்த நபர் திடீரென தவறி பளை இத்தாவில் பகுதியில் ஏ9வீதியில் விழுந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ் போதன வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிருழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொடிகாம ம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராச் (47)வயதையுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews