சீனாவுடன் கைகோர்க்கத் தயாராகும் ரணில்

சீன – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க – சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற அதிபர்கள் இன்று மாலை காணொளி மூலம் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், சீனா தனது பரந்த சந்தையில் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள அனைத்து நாடுகளுடனும், கட்சிகளுடனும் இணைந்து செயற்படும் என்று கூறினார்.

இதன்போது, வளரும் நாடுகளுக்கு சீனச் சந்தையில் நுழைவதற்கு சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி புதிய மற்றும் புதுமையான கட்டத்தை வழங்கியுள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews