க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெற்ற 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 517,496 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews