காக்கைதீவு மண்டபத்தில் தங்கியுள்ள மக்களுக்கு  சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு – சுகாதார பணிப்பாளர்

கடந்த சில நாட்களாக பெய்த கன  மழை காரணமாக இடம் பெயர்ந்து காக்கைதீவு
கடற்றொழிலாளர் மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலிப் லியனகே அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட 12
குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து
காக்கைதீவு  மீனவ சமூக மண்டபத்தில் நேற்று முன்தினம் இருந்து (01) தங்க
வைக்கப்பட்டுள்ளனர் இவர்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று (02) காலை  நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு உரிய சுகாதார வசதிகளை வழங்க சம்பந்தப்பட்டிருப்பது  அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin