ராஜேஸ்வரி மண்டப உரிமையாளரால் 18 வீடுகள் அன்பளிப்பு…!

மகத்தான மனித நேயப்பணியாக. ராஜேஸ்வரி மண்டபத்தின் உரிமையாளரால் தலா 55 இலட்சம் பெறுமதியான 18 வீடுகள் யாழ் மாவட்டம் அச்செழு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்ட வீடு, காணியற்றவர்களுக்கே இவ்வாறு வீடுகள் புதிதாக நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

குறித்த வீட்டுத்திட்டம் 2021 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு “ராஜேஸ்வரி அன்புச்சோலை” எனும் பெயரில் 18 வீடுகளும் கடந்த 30ம் திகதி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வீடுகளை கட்டிக்கொடுத்த ராஜேஸ்வரி மண்டப உரிமையாளர் ஒரு ஆண்மீகவாதி என்பதுடன் அவர் சமூகத்திற்க்கு ஆற்றிய பணிக்காக சமுஇக ஜோதி தேச கீர்த்தி உட்பட  பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிட தக்கது

Recommended For You

About the Author: admin