தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ்.இளைஞன் புதிய சாதனை

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர் , squat பிரிவில் 335 கிலோ கிராமையும், benchpress பிரிவில் 183 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 275 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

இதில் squat மற்றும் deadlift, benchpress ஆகிய மூன்று பிரிவுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 793 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் நிலை நாட்டியுள்ளார்.

அத்துடன் சற்குணராசா புசாந்தன் வருகின்ற டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெறுகின்ற சர்வதேச பளுதூக்கல் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்குணராசா புசாந்தனின் பயிற்றுவிப்பாளர் அரியகுணரசா ஜெயகிருஷ்ணா தெரிவித்ததுடன் சற்குணராசா புசாந்தன் சர்வதேச ரீதியிலும் புதிய சாதனையை படைப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin