நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மருத்துவ முகாம்….!

நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்  ஒன்று நேற்று 30/10/2022 புதுமுறிப்பில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை மண்டபத்தில் நடாத்தப்பட்டுள்ளது.

இதன் போது, பல்வேறு நோய்களிற்கான சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

குறித்த மருத்துவ முகாமில், நிறைவாழ்வு மையத்தின் இயக்குனர் தயாளினி தியாகராஜா, அருட்தந்தை குகனேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin