எதிர்வரும் 2ஆம் திகதி போராட்டம்! ஆதரவு தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சங்கங்கள், குடிசார் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin