மின் துண்டிப்பு நேரம் குறைப்பு: வெளியான புதிய அறிவிப்பு

 

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) இரண்டு மணித்தியாலம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் இரு தினங்கள் 2 மணித்தியாலமாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த நாட்களை விட எதிர்வரும் நாட்களில் 20 நிமிடங்கள் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin