மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக தொடர்ச்சியாக பல மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (18.10.2022) முதல் எதிர்வரும் (21.10.2022) ஆம் திகதி வரை தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin