
பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மையில் குடும்பத் தலைவர்கள் அகால மரணம் அடைந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் மற்றும் கனடா கிளை உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வலி தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இணுவில் மற்றும் உடுவில் கிராமங்களில் வசிக்கின்ற இரண்டு குடும்பங்களுக்கு குறித்த அத்தியாவசிய பொருட்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன.

