இலங்கைக்கு அபயக்கரம் நீட்டியது ஆசிய அபிவிருத்தி வங்கி

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா வருடாந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 70.2 வீதத்தை எட்டியுள்ளதாகவும், உயர் பணவீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த சவாலான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு, கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்று, ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை நிறைவேற்றுச் சபையின் அனுமதியைப் பெறும் என தாம் நம்புவதாக அசகாவா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை நிறைவு செய்த பின்னர், இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என்று அசகாவா கூறினார்.

Recommended For You

About the Author: admin