மோட்டார் சைக்கிள்- பஸ் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு.

சப்ரகமுவ குட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மடுல்ல நோணாகம பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில் மற்றுமொருவர் சந்திரிகாவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin