காட்டில் கைக்குழந்தை மீட்பு!

பண்டுவஸ்நுவர, பண்டார கொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை மேய்க்கச்  சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டுள்ளார்.
அங்கு வந்த கிராம மக்கள் அறிவித்ததன் பேரில் அம்புலன்ஸ் மூலம் குழந்தை நிகவெரட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews