பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு,

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,  பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று முன்தினம் (20.09.2022) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப் பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி, சர்ச் ஹவுஸில் பொதுநலவாய வெளிவிவகார மற்றும் அபிவிருத்திக்கான பொதுநலவாய செயலாளர் ஜேம்ஸ் கிளீவ்லி ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகத் தலைவர்களுடன் நட்புறவு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Recommended For You

About the Author: admin