இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடை நிறுத்தம்!

சர்வதேச விமான நிலையங்களின் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையம் 220 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டது.
இதற்கமைய வாரத்திற்கு மூன்று தடவைகள் மாலைதீவு விமானங்கள் அங்கு தரையிறங்கியதோடு தற்போது அந்த விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews