இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை

இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை எனவும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நாடு என்ற வகையில் இப்படியான உதவியை தொடர்ந்தும் வழங்க முடியாது என இந்திய அரசின் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதை அனைத்தும்  சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியிலேயே தங்கியுள்ளது எனவும் அந்த சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த தீர்மானம் ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல. இதற்கு முன்னர் இந்தியா தொடர்பான சமிக்ஞை ஒன்றை வழங்கி இருந்தது என இலங்கை அரசின் தகவல்கள் கூறியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிய கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியவசிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.

இதனையடுத்து இந்தியா, அத்தியவசியமாக தேவைப்படும் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்கியது.

Recommended For You

About the Author: admin