மகாகவி பாரதியாரின் 101வது ஆண்டு நினைவேந்தல்.

மகாகவி பாரதியாரின் 101வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை கி.கணைச்செல்வன் தலைமையில் வெற்றிலைக்கேணி கிராமத்தில் இடம் பெற்றது.

இதன் போது “பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பனை விதைகள் விதைக்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டது .

அவ்வகையில் ஆரம்ப கட்டமாக வெற்றிலைக்கேணி மற்றும் உடுத்துறை கிராமங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபையினுடைய தவிசாளர் அரியகுமார், எழுத்தாளர் ரஜீவன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர் மதீஸ்வரன் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews