வவுனியா பொது வைத்தியசாலை திருட்டு சம்பவம் சந்தேக நபர் கைது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்ர சிகிச்சைக் கூடத்தில்  கடந்த இடம் பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அறியக்கிக்கிடைத்ததாவது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை தொகுதியில் பொருட்கள் காணாமல் போவது தொடர்பில் சிசிடிவி காட்சியின் உதவியுடன் திருட்டு தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews