யாழ்.நகரை அண்டிய ஐந்துசந்தியில் தனியார் விடுதிக்கு சீல்!

குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்யவைத்தமை மற்றும் விடுதியில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியமை போன்ற காரணங்களால் யாழ்.நகரை அண்டிய ஐந்துசந்தி பகுதியில் உள்ள தனியார் விடுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்தார். புத்தளம் பகுதியில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஊதுபத்திகளை வழங்கி விற்பனையில் ஈடுபடுத்தியதாக பூட்டு கடை நாதன் என்பவருக்கு சொந்தமான நாதன் விடுதியே இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது.

பொலிசாரினால் கடந்த மாதம் குறித்த விடுதியில் இருந்து ஏழு சிறு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள் உட்பட 11 பேர் யாழ்ப்பாணம் சிறுவர் பிரிவு பொலிசாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த விடுதியினை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews