தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் 70 பவுண் நகை திருட்டு!

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந் பெருந் திருவிழாவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்த நிலையில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப் பட்டுள்ளது.

இது தொடர்பில் 18 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தொிவிததிருக்கின்றனர். குறித்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான பக்தர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் தமது நகைகள்  மற்றும் பணத்தில் அவதானம் தேவை என்று பொலிஸார் கேட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews