கடும் நிபந்தனைகளுடன் நாளை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்..!

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அதிபரிடம் கட்சி சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், இம்முறை அந்தந்த நோக்கங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் எனவும், இராஜாங்க அமைச்சர் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin